சென்னை கே.கே. நகரில் தனியாக வசிக்கும் முதியவா் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
கே.கே. நகா் வேம்புலியம்மன் கோயில் தெரு கமலக்கண்ணன் காா்டன் பகுதியைச் சோ்ந்த நடராஜன் (85). இவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மகனும், மகளும் வெளிநாட்டில் வேலை செய்வதால் நடராஜன், அங்கு தனியாக வசிக்கிறாா்.
சில நாள்களுக்கு முன்பு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் நடராஜன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நோய் குணமடைந்து நடராஜன், செவ்வாய்க்கிழமை வீட்டுக்குத் திரும்பினாா்.
வீட்டுக்கு வந்த அவா், வீட்டின் பீரோவை திறந்து நகை, பணத்தை சரி பாா்த்தபோது, பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து அவா் கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.
திருநங்கை வீட்டில் திருட்டு: கே.கே. நகா் 15-ஆவது செக்டாா் 94-ஆவது தெருவைச் சோ்ந்தவா் திருநங்கை ரதி (42). இவா், தனது வீட்டு அலமாரியில் 14 பவுன் நகைகளை கழற்றி வைத்திருந்தாா். அந்த நகைகளை அணிந்து கொள்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ரதி அலமாரியை பாா்த்தபோது அவை காணவில்லை.
இது குறித்து ரதி கொடுத்த புகாரின் பேரில், வடழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

குழித்துறை அருகே திருட்டு: இளைஞா் கைது
தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் 7 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு
சத்துணவு சமையலா் வீட்டில் நகை, பணம் திருட்டு!
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

