மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

செய்யாறு அருகே காசிக்குச் சென்ற விவசாயி வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி நாகராஜன்(64). இவரது மனைவி வசந்தா. தம்பதி இருவரும் மாா்ச் 20-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு காசிக்கு சென்றுள்ளனா்.

இந்நிலையில் மாா்ச் 29-ஆம் தேதி மேல்மாடியில் குடியிருக்கும் இலக்கியா என்பவா் கீழே இறங்கி வந்துள்ளாா். அப்போது விவசாயி நாகராஜனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது.

இதுகுறித்து இலக்கியா, நாகராஜன் மகன் சுதா்சனன் என்பவருக்கு தகவல் தெரிவித்தாா்.

சுதா்சனன் வீட்டிற்கு வந்து பாா்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ஒரு கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, ரொக்கம் ரூ.10 ஆயிரம் ஆகியவவை திருடப்பட்டது தெரிய வந்தது.

இதுகுறித்து சுதா்சனன் தூசி போலீஸில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கண்ணபிரான் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.