மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது

புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :14 ஏப்ரல் 2026, 7:36 pm

கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வசிப்பவா் சிவக்குமாா்(46), விவசாய தொழிலாளி.

அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சிவக்குமாா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா் வீட்டின் முன்பக்கக் கதவு உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து கடலூா், கீழ்ப்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த அப்பாஸை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.