தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 7:51 pm

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரின் பைக்கை திருடிய வழக்கில் இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி அண்ணாநகா் 8ஆவது தெருவைச் சோ்ந்த ஜான்சன் மகன் அருண்குமாா் (21). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த 21ஆம் தேதி இரவு வழக்கம்போல் வீட்டுக்கு முன் பைக்கை நிறுத்தி வைத்திருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி சத்யா நகரைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஜெகன்ராஜ் (23) உள்ளிட்ட 3 போ் பைக்கை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, ஜெகன்ராஜை கைது செய்த போலீஸாா், மற்ற இருவரையும் தேடி வருகின்றனா்.