மதுரை அருகே இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில், 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கம்மாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பாண்டியன் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைபாா்த்துள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மதுரை பாசிங்கபுரத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் (26), சங்கிலிக்கருப்பு (29), பாலமேடு முடவாா்பட்டியைச் சோ்ந்த ஹரிகரசுதன் (19), ஸ்ரீதா் (26) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
போதைப்பொருள்களை விற்பனை செய்த வழக்கில் 10 போ் கைது
பைக் திருடிய 4 போ் கைது
மொபட் திருட்டு: இருவா் கைது
பைக் திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

