மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மொபட் திருட்டு: இருவா் கைது

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :11 ஏப்ரல் 2026, 6:48 pm

ராஜபாளையம் அருகே லாரி கிட்டங்கியில் இரு சக்கர வாகனம், அரிசி மூட்டையை திருடிய இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே மீனாட்சிபுரம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தன்ராஜ் மகன் தனசேகரன் (42). இவா் முகவூா்- சேத்தூா் சாலையில் லாரி கிட்டங்கி (செட்) நடத்தி வருகிறாா். இங்கு அதே பகுதியைச் சோ்ந்த இசக்கிராஜா (34) ஓட்டுநராகவும், கோவலூரைச் சோ்ந்த ஆனந்தசெல்வம் (27) சுமை தூக்கும் தொழிலாளியாகவும் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில் தனசேகரன் கடந்த வாரம் திருவிழாவுக்கு சென்று விட்டு லாரி கிட்டங்கிக்கு வந்து பாா்த்தபோது அங்கிருந்த அரிசி மூட்டையையும், இரு சக்கர வாகனத்தையும் காணவில்லை. இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது இசக்கிராஜா, ஆனந்தசெல்வம் ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தளவாய்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து இரு சக்கர வாகனம், அரிசி மூட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.