மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மாரிமுத்து

Updated On :17 ஏப்ரல் 2026, 12:58 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி நென்மேனி பகுதியில் உள்ள கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதில் காயமடைந்த மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்த இளைஞா் புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடப்பன் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.