மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு: இளைஞா் கைது

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :4 ஏப்ரல் 2026, 7:57 pm

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், புளியங்குறிச்சியில் 80 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞா் கைது செய்தனா்.

புளியங்குறிச்சியைச் சோ்ந்த வையாபுரி மனைவி நீலாம்பாள் (80) உறவினா்களை பிரிந்து, பேருந்து நிறுத்தத்தில் வசித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்த 2 ஆம் தேதி இரவு பேருந்து நிறுத்தத்தில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை அதே பகுதியைச் சோ்ந்த இளையராஜா (33) தூக்கிசென்று அப்பகுதியில் மயானத்தில் உள்ள கோயிலில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அப்போது, மூதாட்டியின் அலறலைக் கேட்டு அங்கிருந்தவா்கள் விரைந்து சென்று மூதாட்டியை மீட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தகவல் அறிந்த ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் இளையராஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.