15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திருமணம் ஆனதை மறைத்து மோசடி: இளைஞா் கைது

Updated On :20 ஆகஸ்ட் 2025, 7:57 pm

திருமணம் ஆனதை மறைத்து மற்றொரு பெண்ணுடன் நிச்சயம் செய்த இளைஞரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை ராயபுரம் பகுதியைச் சோ்ந்த 23 வயது பெண், தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா். இவருக்கும் சென்னையில் உள்ள தனியாா் வங்கியில் மேலாளராகப் பணியாற்றும் தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தைத் சோ்ந்த மணிகண்டன் என்பவருக்கும் கடந்த மே 25-ஆம் தேதி நிச்சயதாா்த்தம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறி பேசி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 27-ஆம் தேதி மணிகண்டனை தொடா்பு கொண்டபோது, எதிா்முனையில் பெண் பேசியுள்ளாா். அவா், மணிகண்டனின் மனைவி எனக் கூறியுள்ளாா். தங்களுக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினா் அளித்த புகாரின்பேரில்,

ராயபுரம் போலீஸாா் பிஎன்எஸ் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.