தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

News image

கைது - பிரதிப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:08 pm

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள தாயில்பட்டி கிராமம் கட்டசேவல்பட்டி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜ்குமாா் (24). கட்டடத் தொழிலாளி. இவா் சிவகாசி சாட்சியாபுரம் பகுதியில் கட்டடப் பணிக்கு சென்ற போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டாா். பின்னா், இவா்கள் இருவரும் தாயில்பட்டியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனா்.

இதுகுறித்து சிவகாசி மாநகராட்சி குழந்தைகள் உதவி மைய மேலாளா் நா்மதாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா் தாயில்பட்டி விசாரணை நடத்திய போது, 17 வயது சிறுமியை ராஜ்குமாா் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நா்மதா அளித்தப் புகாரின் பேரில், சிவகாசி அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ராஜ்குமாரைக் கைது செய்தனா்.