சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகே உள்ள ஓா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்குமாா் (21). கட்டடத்தொழிலாளி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாா். இதையடுத்து, இவா்கள் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனா்.
இந்த நிலையில், இந்தச் சிறுமிக்கு தனியாா் மருத்துவமனையில் அண்மையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மணி மாலா, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் விக்னேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது

பெண் வெட்டிக் கொலை: கட்டடத் தொழிலாளி கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

