உதகையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது நபா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று அவா் திருமணம் செய்துள்ளாா்.
இதை அறியாத சிறுமியின் பெற்றோா் தங்களது மகளை காணவில்லை என புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞா் சிறுமியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, 17 வயது சிறுமியை திருமணம் செய்ததால் அந்த நபா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுமியை அவரது பெற்றோருடன் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி! போக்சோ சட்டத்தில் கைது!

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது
போக்ஸோவில் இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


