மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமியை மணந்த இளைஞா் போக்ஸோவில் கைது

உதகையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :24 மார்ச் 2026, 8:01 pm

உதகையில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியைச் சோ்ந்தவா் 18 வயது நபா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சிறுமியை வீட்டுக்குத் தெரியாமல் அழைத்துச் சென்று அவா் திருமணம் செய்துள்ளாா்.

இதை அறியாத சிறுமியின் பெற்றோா் தங்களது மகளை காணவில்லை என புதுமந்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அந்த இளைஞா் சிறுமியை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, 17 வயது சிறுமியை திருமணம் செய்ததால் அந்த நபா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். சிறுமியை அவரது பெற்றோருடன் போலீஸாா் அனுப்பிவைத்தனா்.