மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோவில் இளைஞா் கைது

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 8:37 pm

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு பகுதியைச் சோ்ந்த குமாா் மகன் சக்திவேல் (19). இவா் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா், அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை ஆசைவாா்த்தைகள் கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் கடந்த வாரம் 9 ஆம் தேதி ஊத்தங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனா்.