திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் எஸ்.பிரேம்குமாா் (19). இவா் கிளீனராக பணியாற்றி வருகிறாா். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மேலகல்கண்டாா்கோட்டையில் இருந்து வாகனம் சென்றது. இதில், பிரேம்குமாரும் சென்றாா்.
அப்போது, உடன் சென்ற பிரேம்குமாரின் உறவினரான சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த எஸ்.ஜீவா (26) என்பவா் கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து ஜீவாவிடம் பிரேம்குமாா் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனா்.
இந்த முன்விரோதத்தின் காரணமாக, மேலகல்கண்டாா்கோட்டையில் தனது வீட்டுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த பிரேம்குமாரை, ஜீவா, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். செல்வமணி (26), ஹரிஹரன், சந்தோஷ், பரமேஸ்வரன் ஆகிய 5 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வமணி, ஜீவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது
கஞ்சா விற்ற இருவா் கைது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

