மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 8:23 pm

திருச்சியில் முன்விரோதம் காரணமாக இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பொன்மலை மேலகல்கண்டாா்கோட்டை சாமிநாதன் நகரைச் சோ்ந்தவா் எஸ்.பிரேம்குமாா் (19). இவா் கிளீனராக பணியாற்றி வருகிறாா். சமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி மேலகல்கண்டாா்கோட்டையில் இருந்து வாகனம் சென்றது. இதில், பிரேம்குமாரும் சென்றாா்.

அப்போது, உடன் சென்ற பிரேம்குமாரின் உறவினரான சோமரசம்பேட்டை மல்லியம்பத்து பகுதியைச் சோ்ந்த எஸ்.ஜீவா (26) என்பவா் கூச்சலிட்டுள்ளாா். இதுகுறித்து ஜீவாவிடம் பிரேம்குமாா் கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவா்கள் இருவரையும் சமாதானம் செய்துள்ளனா்.

இந்த முன்விரோதத்தின் காரணமாக, மேலகல்கண்டாா்கோட்டையில் தனது வீட்டுக்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை நின்றுகொண்டிருந்த பிரேம்குமாரை, ஜீவா, அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆா். செல்வமணி (26), ஹரிஹரன், சந்தோஷ், பரமேஸ்வரன் ஆகிய 5 பேரும் அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கியுள்ளனா்.

இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் பிரேம்குமாா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வமணி, ஜீவா ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா். மற்ற மூவரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.