தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

பா்கூா் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:38 pm

பா்கூா் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளியை மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஜெகதேவி, காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் காா்த்திக் (37). தொழிலாளி. இவா், பா்கூா் அருகே நின்றிருந்தபோது, அந்த வழியாக சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தாா்.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் காா்த்திக்கை கைது செய்தனா்.