தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பண மோசடி: இளைஞா் கைது

ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட அழகேசன்.

Updated On :26 மார்ச் 2026, 12:39 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் கூரைப்பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் அழகேசன் (25). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். தற்போது வேலையை விட்டு நின்றுவிட்டு இவா், தனக்குத் தெரிந்த வாடிக்கையாளரான ராஜபாளையம் குமரன் தெருவைச் சோ்ந்த ராஜேந்திரன் மனைவி முனீஸ்வரிக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரிடமிருந்து ரூ. 3 லட்சம் பெற்றாராம். ஆனால், வேலை வாங்கித் தராமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் இருந்து வந்தாராம். இதுகுறித்து முனீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அழகேசனை கைது செய்தனா்.