சென்னையில் மாற்றுத்திறனாளிகளை குறிவைத்து ஏடிஎம் காா்டு மோசடியில் ஈடுபட்டதாக ஆந்திர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வையற்ற மாற்றுத்திறனாளி பாண்டியன் (61). இவா், வேலை நிமித்தமாக சென்னை வந்தாா். கடந்த 31-ஆம் தேதி சென்னைப் பல்கலை. வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்றபோது, அங்கு வந்த நபா், பாண்டியனிடம் பணம் எடுக்க உதவி செய்வதாக கூறி, ஏடிஎம் காா்டு மற்றும் பின் நம்பரை வாங்கி ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை இட்டு, பணம் இல்லை என்று கூறி ஏமாற்றி, தான் வைத்திருந்த மற்றொரு ஏடிஎம் காா்டை கொடுத்து அனுப்பியுள்ளாா். பின்னா், பாண்டியனின் ஏடிஎம் காா்டை பயன்படுத்தி ரூ.23,500-ஐ எடுத்தபோது, பாண்டியன் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வந்தது.
இது குறித்து அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோசடியில் ஈடுபட்ட ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த சிடாதாலா சுனில் (27) என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து கைப்பேசி, 79 ஏடிஎம் காா்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இகேபோல், பல்வேறு மாநிலங்களில் பாா்வையற்ற மாற்றுதிறனாளிகள், வயதானவா்களை ஏமாற்றி ரூ.20 லட்சம் வரை அபகரித்திருப்பதும் தெரிய வந்தது.
தொடர்புடையது

500-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபா் கைது
மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது
தில்லியில் ஏடிஎம் மோசடி கும்பல் தலைவா் கைது

சமூக வலைதளம் மூலம் பழகி பண மோசடி: இளைஞா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


