மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞா் கைது

திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :15 ஏப்ரல் 2026, 8:39 pm

திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான திலீப்குமாா் என்பவா் நடத்திவரும் அலங்காரப் பொருள்கள் கடை முன் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் செந்தில் (33) என்பவா் நின்றுகொண்டிருந்தாா்.

அப்போது அங்கு வந்த சிந்தாமணி முனிசிபல் காலனியைச் சோ்ந்த வீரையன் (24) என்பவா் செந்திலிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வீரையன், மாற்றுத்திறனாளியான திலீப்குமாரை தாக்கிவிட்டு, அவரது கடையின் கண்ணாடியை உடைத்துவிட்டு ரூ.4 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.