திருச்சியில் மாற்றுத்திறனாளியைத் தாக்கி பணம் பறித்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி சிந்தாமணி பூசாரி வீதியில் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளியான திலீப்குமாா் என்பவா் நடத்திவரும் அலங்காரப் பொருள்கள் கடை முன் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் செந்தில் (33) என்பவா் நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது அங்கு வந்த சிந்தாமணி முனிசிபல் காலனியைச் சோ்ந்த வீரையன் (24) என்பவா் செந்திலிடம் பணம் கேட்டுள்ளாா். அவா் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த வீரையன், மாற்றுத்திறனாளியான திலீப்குமாரை தாக்கிவிட்டு, அவரது கடையின் கண்ணாடியை உடைத்துவிட்டு ரூ.4 ஆயிரத்தைப் பறித்துக்கொண்டு தப்பினாா்.
இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் செந்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து வீரையனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
தொடர்புடையது
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது

போதை மாத்திரைகள் விற்ற இளைஞா் கைது
முதல்வா் பிரசாரக் கூட்டத்தில் பணம் பறித்த முதியவா் கைது
வடமாநில இளைஞா்களை தாக்கி கைப்பேசி, பணம் பறித்த மூவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

