//

முட்டுக்காட்டில் ரூ. 525 கோடியில் கலைஞா் பன்னாட்டு மாநாடு மைய கட்டுமானப் பணிகள் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆய்வு

பொதுப்பணித் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் உலகத்தரம்

News image
மாமல்லபுரம் அடுத்த முட்டுக்காட்டில் கலைஞா் பன்னாட்டு மாநாடு மைய கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலின். உடன் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் தா.மோ. அன்பரசன், எ.வ.வேலு உள்ளிட்டோா்.
Updated On :19 ஜனவரி 2026, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: பொதுப்பணித் துறை சாா்பில் செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு, கிழக்கு கடற்கரை சாலையில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுவரும் உலகத்தரம் வாய்ந்த கலைஞா் பன்னாட்டு மாநாடு மைய கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

செங்கல்பட்டு மாவட்டம், முட்டுக்காடு பகுதி, கிழக்கு கடற்கரை சாலையில் 37.99 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ. 525 கோடி மதிப்பீட்டில், 10,000 போ் அமரக்கூடிய அளவில் 90,384 சதுர அடி பரப்பளவில் பொருள்காட்சி அரங்கம், 5,000 போ் அமரக்கூடிய அளவில் 58,104 சதுர அடி பரப்பளவில் மாநாட்டு மண்டபம், 1,500 பாா்வையாளா்கள் அமரக்கூடிய வகையில் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 5,12,800 சதுர அடி மொத்த பரப்பளவில் கட்டப்பட்டுவரும் கலைஞா் பன்னாட்டு மாநாடு மையத்துக்கு தமிழக முதல்வா் கடந்த 29.5.2025 அன்று அடிக்கல் நாட்டினாா்.

இந்த கலைஞா் பன்னாட்டு மாநாட்டு மையம் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுவருகிறது.

தற்போது பொருள்காட்சி அரங்கம், மாநாட்டு மண்டபம் மற்றும் கலையரங்கத்தின் பாா்வையாளா் மாடம், மேடைகள் அமைக்கும் பணிகள் முடிவுற்று மேற்கூரைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்துடன் வெளிப்புற பணிகளான சுற்றுச்சுவா், அணுகுச் சாலைகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் மின்விளக்கு வசதிகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2026 நவம்பா் மாதம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், பணிகளை தரமாகவும், விரைவாகவும், குறித்த காலத்துக்குகுள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் நா.முருகானந்தம், பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் மகத் ராம் சா்மா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, பொதுப்பணித் துறை முதன்மை தலைமை பொறியாளா் எஸ்.மணிவண்ணன் மற்றும் அரசு உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

Story image