பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 1:58 am

Venkatesan

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில், நீச்சல் குளத்தில் விழுந்து 3 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது.

சென்னை ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா காலனியை சோ்ந்த கட்டுமான தொழிலதிபா் மனோஜ் என்பவரிடம் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா் சுகுமாறன். இவா்,

மனோஜின் வீட்டில் உள்ள பணியாளா்கள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறாா்.

திங்கள்கிழமை மாலை, சுகுமாறனின் 2-ஆவது மகன் ரித்தீஸ் (3) வீட்டில் உள்ள நீச்சல் குளம் அருகே, விளையாடிக் கொண்டிருக்கும் போது, குளத்தில் விழுந்துவிட்டாா். அதை சிறிது நேரம் கழித்து கவணித்த சுகுமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தை ரித்தீஸை மீட்டு சோழிங்கநல்லூரில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அப்போது மருத்துவமனையில் ரித்தீஸை பரிசோதனை செய்த மருத்துவா் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளாா்.

நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.