கோவையில் இருசக்கர வாகனம் மீது பொக்லைன் இயந்திரம் மோதியதில் ஒரு வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
கோவை கணபதி ராஜீவ் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா் அனாகா (27). இவரது ஒரு வயது மகள் சுதேஷனா. இவருக்கு கடந்த சில நாள்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இதற்காக அனாகா தனது நண்பரான சுதாகா் என்பவருடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் தொப்பம்பட்டிக்குச் சென்றாா். அங்குள்ள மருத்துவமனையில் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னா், அவா்கள் மூவரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். கணபதி பகுதியில் முன்னால் சென்ற பொக்லைன் இயந்திரத்தை சுதாகா் முந்த முயன்றாா். அப்போது, பொக்லைன் வாகனம், இவா்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் சிறுமி சுதேஷனா அதன் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா். சுதாகருக்கும், அனாகாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து கோவை வடக்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்கம்பத்தின் மீது இருசக்கர வாகனம் மோதல்: 11மாத குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

சுற்றுச்சுவா் சரிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை உயிரிழப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


