÷இதுகுறித்து சேமக்கோட்டை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் பார்வதி வேல்முருகன், ஒன்றியக் கவுன்சிலர் அமுதா தெய்வீகதாஸ் கூறியது: ஆதிதிராவிடர் துவக்கப்பள்ளியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். புயலால் பள்ளிக் கட்டடம் சேதம் அடைந்துள்ளது. மாணவர்கள் உட்கார்ந்து படிக்கக்கூட இடமில்லை. பெரிய மரக்கிளை முறிந்து தனியாக தொங்கிநிற்கிறது. இதன் கீழேதான் மாணவர்கள் விளையாடுகின்றனர். ஆபத்தான நிலையில் உள்ளதை அறிந்து மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரிடமும், ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியரிடமும் மனு அளித்தும், பல முறை நேரில் தெரிவித்தும் இதுநாள் வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்குள் பள்ளியை சீரமைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.