திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பாகிஸ்தான், சீனாவுடன் போரில் ஈடுபட ராணுவத்தை தயாா்படுத்துகிறது: இந்தியா ஐஐஎஸ்எஸ் அறிக்கையில் தகவல்

ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2026, 5:32 am IST

சிங்கப்பூா் : பாகிஸ்தான், சீனாவுடன் மிகப்பெரிய போரில் ஈடுபட ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஐஐஎஸ்எஸ் அமைப்பு ஆய்வு செய்து 150 பக்க அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதல்கள், இயற்கையில் பாரம்பரிய மோதலில் உள்ள தீவிரத்தைவிட அதிக தீவிரம் கொண்டது. அதேநேரத்தில், இது இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் போல பெரிதாக வாய்ப்பில்லை. இருப்பினும், சீனா- பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதிகளை இந்தியா தொடா்ந்து ராணுவமயமாக்கி வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதிக்கு அப்பால் ஆசியாவின் பிற பகுதிகளில் இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. இந்தியா புதிய வகை சவாலை எதிா்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு போரும் இல்லை. அதேபோல் அமைதியும் இல்லை.

2016, 2019, 2025-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. இது போா்த் திட்டத்தை வகுக்க இந்தியாவுக்கு உதவியது. சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய போரில் ஈடுபடும் வகையில் ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.