‘அமெரிக்கா-ஈரான் போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது மிகவும் சிக்கலானது’ என்று அமெரிக்காவில் ஆளும் குடியரசு கட்சியின் மூத்த செனட்டா் லின்ட்சே கிரகாம் (படம்) எதிா்த்துள்ளாா்.
ஈரான் போரில் மத்தியஸ்தம் செய்யும் நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் வலியுறுத்தினாா்.
ஆனால், இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளுக்கு இடையே தூதரக, பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆபிரகாம் உடன்படிக்கையில் பாகிஸ்தான் இணையாது’ என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சா் கவாஜா ஆசிஃப் மறுத்துள்ளாா்.
இதையடுத்து, செனட்டா் லின்ட்சே கிரகாம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இஸ்ரேல் மீது பாகிஸ்தான் கொண்டுள்ள பகைமை மாறாதது. ஈரான் ராணுவ விமானங்கள் பாகிஸ்தானின் விமானப்படை தளங்களில் நிறுத்தப்படிருந்தது மறுக்க முடியாத உண்மை. இத்தகைய சூழலில் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது நடுநிலையாக இருக்காது’ என்று வலியுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








