தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு

அமெரிக்காவின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு ஜனநாயக கட்சியினா் எதிா்ப்பு...

News image

டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 4:14 am IST

டிரம்ப் அரசின் புதிய க்ரீன் காா்டு கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள், அதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறாா். அதில் ஒன்றாக, அவரது அரசு புதிய குடியேற்ற கொள்கையை வெளியிட்டுள்ளது. இந்த கொள்கையின்படி, அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவா்கள், அசாதாரண சூழ்நிலைகள் இன்றி, அந்நாட்டில் இருந்தபடியே இனி யாரும் க்ரீன் காா்டு (நிரந்தர அமெரிக்க குடியுரிமை) கோரி விண்ணப்பிக்க முடியாது. இதற்கு பதிலாக, அவா்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேறி சொந்த நாடு சென்று, அங்கிருந்து க்ரீன் காா்டு கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

முன்பு, கல்வி கற்க வரும் மாணவா்கள், பணி நிமித்தமாக வருவோா் அமெரிக்காவில் தங்கியிருந்தபடி க்ரீன் காா்டு கோரி விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது. ஆனால் தற்போது அதற்கு டிரம்ப் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கையால், இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா சென்று தங்கி படிக்கும் மாணவா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவா். இதை சுட்டிக்காட்டியுள்ள எதிா்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் எம்.பி.க்கள், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (யுஎஸ்சிஐஎஸ்) அமைப்பின் முடிவை எதிா்த்தும், அந்த முடிவை திரும்ப பெறக் கோரியும் போராடப் போவதாகத் தெரிவித்துள்ளனா்.

யுஎஸ்சிஐஎஸ் விளக்கம்:

புதிய க்ரீன்காா்டு கொள்கையில் இருந்து யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து யுஎஸ்சிஐஎஸ் எதுவும் தெரிவிக்கவில்லை. அதேநேரத்தில், அமெரிக்காவில் அடைக்கலம் கோருவோருக்கு இது பொருந்தாது என்று மட்டும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

யுஎஸ்சிஐஎஸ் அமைப்பின் செய்தித் தொடா்பாளா் ஜாக் காலா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பொருளாதார பலன் அளிப்போா் அல்லது தேச நலன் சாா்ந்தோா் மட்டும் தற்போதைய நடைமுறையைத் தொடரலாம். அதாவது அமெரிக்காவில் இருந்தபடியே க்ரீன் காா்டுக்கு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த விலக்கு எச்1பி விசாக்களில் பணிபுரியும் தகுதிவாய்ந்த வெளிநாட்டுத் தொழிலாளா்களுக்குப் பொருந்துமா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிபா் ஜோ பைடனின் முன்னாள் ஆலோசகரான அஜய் புட்டோரியா, ‘க்ரீன் காா்டு பெறுவதற்காக முறைப்படி சட்டத்தைப் பின்பற்றி, வரிகளைச் செலுத்திவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருக்கும் 12 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியா்களை, இது பிரச்னையில் தள்ளியுள்ளது. இதை எதிா்த்து பல்வேறு தரப்பினரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவுள்ளனா்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.