17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரதமர் மோடி நல்ல நண்பர்: இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள டிரம்ப் விருப்பம்

இந்தியாவுடன் விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை

News image

வெள்ளை மாளிகையில் டிரம்ப் - AP

Updated On :5 ஜூன் 2026, 8:30 am IST

இந்தியாவுடன் விரைவில் நல்ல வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியதாவது, உங்கள் பிரதமரை (மோடி) எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் என்னுடைய நல்ல நண்பர். எங்களுக்குள் சிறந்த நட்புறவு இருக்கிறது.

பல ஆண்டுகளாக அமெரிக்காவை இந்தியா சுரண்டி வந்தது. அவர்கள் எங்கள் மீது பெரும் வரியை சுமத்தினர். ஆனால், அவர்கள் ஏதும் செலுத்தவில்லை.

இப்போது நிலைமை தலைகீழாக மாறி, நாங்கள் இந்தியாவுடன் நிறைய பணம் சம்பாதிக்கிறோம். ஆனால், நாங்கள் விரைவில் ஒரு உடன்பாட்டுக்கு வருவோம் என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டியதோடு, இந்தியாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான தனிப்பட்ட உறவைச் சுட்டிக்காட்டி , இரு நாடுகளும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும்நிலையில், இந்தியா உள்பட 60 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 12.5 சதவிகித வரி விதிப்பது குறித்து டிரம்ப் அரசு பரிசீலித்து வருவதால், பேச்சுவார்த்தையில் நிச்சயமற்ற தன்மை நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

He is a good friend: US President Trump praises PM Modi, signals US - India trade deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.