அமெரிக்க நைஜீரியப் படைகளின் கூட்டு முயற்சியால் ஐஎஸ்ஐஎஸ்-ன் இரண்டாம் நிலை தளபதி அபு-பிலால் அல்-மினூகி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்ததாவது:
எனது வழிகாட்டுதலின்படி, அமெரிக்கப் படைகளும் நைஜீரியாவின் ஆயுதப் படைகளும் இணைந்து உலகின் மிகவும் தீவிரமான பயங்கரவாதியைப் ஒழிப்பதற்காக, சிக்கலான ஒரு பணியைக் குறைபாடின்றி நிறைவேற்றின.
உலகளவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இரண்டாம் நிலை தளபதியான அபு-பிலால் அல்-மினூகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாகலாம் என்று நினைத்தார். ஆனால், அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை உளவாளிகள் எங்களுக்குத் தொடர்ந்து தகவல் அளித்து வந்தனர். அது அவருக்குத் தெரியவில்லை.
அவர் இனி ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ, அல்லது அமெரிக்கர்களைக் குறிவைக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிடவோ முடியாது. அவர் கொலை செய்யப்பட்டதால், ஐஎஸ்ஐஎஸ்-ன் உலகளாவிய செயல்பாடு பெருமளவில் குறைந்துள்ளது. இந்த நடவடிக்கையில் அமெரிக்காவுக்கு ஒத்துழைப்பு நல்கிய நைஜீரிய அரசுக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
US President Donald Trump has stated that Abu-Bilal al-Minuqi, a second-tier commander of ISIS, was killed through a joint effort by American and Nigerian forces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








