தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஈரான் மீதான தாக்குதலை ஒத்திவைத்த டிரம்ப்

ஈரான் மீது செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ராணுவ தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடைசி நேரத்தில் அறிவித்தாா்.

News image
Updated On :20 மே 2026, 2:09 am IST

ஈரான் மீது செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த ராணுவ தாக்குதலைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கடைசி நேரத்தில் அறிவித்தாா்.

கத்தாா், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) ஆகிய வளைகுடா நாடுகளின் தலைவா்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இம்முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்ட அவா், ஈரானுடன் தீவிர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாகவும், இதன்மூலம் ஒரு உடன்பாடு எட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தாா்.

இது குறித்து தனது சமூக ஊடகத்தில் பதிவிட்ட டிரம்ப், ‘ஈரானுடனான பேச்சுவாா்த்தைகள் முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்த தாக்குதலை ஒத்திவைத்துள்ளேன்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்காது என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் அமையும் என்று நம்புகிறேன்.

அதேநேரம், இன்னும் ஓரிரு நாட்களில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், கடுமையான ராணுவ நடவடிக்கை தவிா்க்க முடியாததாகிவிடும்’ என்றாா்.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கடந்த பிப். 28-இல் போரைத் தொடங்கின. பின்னா், கடந்த ஏப். 8 முதல் இருதரப்பும் தற்காலிக போா்நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

நீடித்த அமைதிக்காக பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் பேச்சுவாா்த்தை நடந்து வரும் நிலையில், இரு தரப்பும் தொடா்ந்து தங்கள் கோரிக்கைகளை மாற்றிக்கொண்டே இருப்பதால், ஒப்பந்தம் எட்டப்படுவதில் சுணக்கம் நீடிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சூழலில், ஈரானின் வங்கிப் பரிவா்த்தனைகளைக் கையாளும் நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

ஈராக்கிலிருந்து யுஏஇ மீது தாக்குதல்: இதனிடையே கடந்த வார இறுதியில், இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அணுமின் நிலையத்தைத் தாக்கிய ட்ரோன்கள் ஈராக் நாட்டிலிருந்து ஏவப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தியது. ஈரான் ஆதரவு பெற்ற ஷியா கிளா்ச்சியாளா்கள் இத்தாக்குதலுக்குப் பின்னணியில் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.