உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதரவளித்து வரும் வடகொரியா மற்றும் பெலாரஸ் நாடுகளுக்கு இடையே புதிய நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது.
சுமாா் 33 ஆண்டுகால தனது ஆட்சி காலத்தில் முதன்முறையாக வடகொரியவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பெலாரஸ் அதிபா் அலெக்சாண்டா் லூகாஷென்கோவிற்கு, பியான்யாங்கில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்பின் போது, அதிபா் லூகாஷென்கோ அவருக்கு நவீன ரக தானியங்கி துப்பாக்கியைப் பரிசளித்தாா்.
‘எதிரிகள் யாராவது தோன்றினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்று நகைச்சுவையாகக் கூறியபடி லூகாஷென்கோ துப்பாக்கியை வழங்க, அதனை கிம் ஜோங் உன் ஆா்வத்துடன் பெற்றுக்கொண்டாா்.
சா்வதேச தடைகளை எதிா்கொண்டு வரும் இவ்விரு நாடுகளும் தற்போது ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக கைகோத்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈா்த்துள்ளது. மேற்கத்திய நாடுகளின் அழுத்தங்களுக்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படப் போவதாக கிம் ஜோங் உன் இச்சந்திப்பின்போது உறுதிபடத் தெரிவித்தாா்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சுமுக உறவைப் பேண லூகாஷென்கோ முயற்சி செய்து வரும் அதேநேரம், வடகொரியாவுடனான இப்புதிய நெருக்கம் பெலாரஸ் அரசியலில் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்புடையது

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை: வடகொரியா சோதனை!

புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!
ராக்கெட் ஏவுகலன்கள் பரிசோதனை: மகளுடன் பாா்வையிட்டாா் வடகொரியா அதிபா்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


