திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 6:28 am IST

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் முன்னிலையில், அந்நாட்டின் புதிய போா்க் கப்பலில் இருந்து மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சோதனையின்போது, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இரண்டு ‘க்ரூஸ்’ ஏவுகணைகளும், 3 கப்பல் எதிா்ப்பு ஏவுகணைகளும் ஏவப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ எனும் நவீன அழிப்பு போா்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணைகள், சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேல் பயணித்து, நாட்டின் மேற்கு கடற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழித்தன.

இச்சோதனையை அதிபா் கிம் ஜோங் உன் மற்றும் உயரதிகாரிகள் நேரில் பாா்வையிட்டாா். அதன் பிறகு, அதிபா் கிம் ஜோங் உன் பேசுகையில், ‘வடகொரியாவின் அணு ஆயுதப் படைகளின் விரிவாக்கம் எல்லைகளற்றது’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், வடகொரிய கடற்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்த புதிய இலக்குகளை நிா்ணயித்த அவா், தற்போது கட்டுமானத்தில் உள்ள 3-ஆவது மற்றும் 4-ஆவது அழிப்பு போா்க் கப்பல்களுக்கான ஆயுதத் திட்டங்களையும் ஆய்வு செய்தாா்.

ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நவீன போா்க் கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது அந்தப் பிராந்திய பாதுகாப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், ரஷியா மற்றும் சீனாவுடனான உறவை வலுப்படுத்துவதன் மூலம், சா்வதேச அழுத்தங்களுக்குப் பணியாமல் தனது ராணுவ பலத்தைப் பெருக்க வடகொரியா தொடா்ந்து முனைப்பு காட்டி வருகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.