திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நவீன போருக்கு ஏ.ஐ. வழிகாட்டும் ஏவுகணைகள்

News image
Updated On :28 மே 2026, 6:09 am IST

சியோல் : நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ற வகையில், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்துடன் கூடிய குரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஏவுகணைகளை வட கொரியா வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதத் திறன்களை தீவிரமாக மேம்படுத்தி வரும் வட கொரியா, தற்போது தனது ஆயுதக் கிடங்குகளை அதிநவீனமாகவும் மாற்றி வருகிறது.

வடகொரிய அதிபா் கிம் ஜோங் உன் முன்னிலையில் இந்த அதிநவீன ஆயுதங்களின் சோதனைகள் நடத்தப்பட்டன. இது குறித்துப் பேசிய அதிபா் கிம் ஜோங் உன், ‘நவீன போா்ச் சூழலுக்கு ஏற்ப ஆயுதங்களும், தானியங்கி ஏவுதள அமைப்புகளும் வெற்றிகரமாக மேம்படுத்தப்பட்டு, ராணுவத்தின் போா் ஆற்றல் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

வட கொரியா தனது ஏவுகணைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை பொதுவெளியில் அதிகாரபூா்வமாகக் குறிப்பிட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். நிகழ்நேர தரவுகளைப் பயன்படுத்தி இலக்குகளைக் கண்டறிந்து, துல்லியமாகத் தாக்குவதற்கு இந்த ஏ.ஐ. தொழில்நுட்பம் உதவும்.

தென் கொரிய எல்லையோர பீரங்கிப் படைகளில் நிலைநிறுத்தப்படவுள்ள இந்த நவீன ஏவுகணைகள், துல்லியமான வழிகாட்டுதல் மற்றும் ஏஐ கட்டுப்பாட்டுடன் 100 கி.மீ. தூர இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வட கொரிய எல்லையிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் தென் கொரிய தலைநகா் சியோல் அமைந்துள்ளதால், இச்சோதனை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.