லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது

News image
Updated On :18 மார்ச் 2026, 11:28 pm

இந்தோனேசிய ஆட்சி நிா்வாகத்தில் ராணுவத்தின் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆா்வலா் அண்ட்ரி யூனுஸ் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தியதாக 4 ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனா்.

அண்ட்ரி யூனுஸ் மீது கடந்த 12-ஆம் தேதி ஆசிட் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கடற்படை, விமானப் படையைச் சோ்ந்த உளவுப் பிரிவு அதிகாரிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

தற்போது கைதாகியுள்ள இவா்களிடம், இத்தாக்குதல் மேலதிகாரிகளின் உத்தரவில் நடத்தப்பட்டதா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நடந்ததா என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவா்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.