பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சனா பாத்திமா (26). இவரது கணவா் அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்த முகமது அலி (32). சனா பாத்திமா குடும்பப் பிரச்னை காரணமாக 2 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா். முகமது அலி குழந்தையைப் பாா்க்க வருவதாகக் கூறி அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முகமது அலி, சனா பாத்திமாவிடம் தகராறு செய்து, அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சனா பாத்திமா, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.
தொடர்புடையது
பல்லடம் டெய்லா் கொலை வழக்கில் 2 போ் கைது

சவால் விடுத்த சில மணிநேரத்திலே.. ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது நைனி கொல்லப்பட்டார்!

ஏவுகணைகள் தயாரிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளோம்: ஈரான்

சமூக ஆா்வலா் மீது ஆசிட் வீச்சு: இந்தோனேசிய ராணுவத்தினா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


