லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மனைவி மீது ஆசிட் வீச்சு: கணவா் கைது

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :17 மார்ச் 2026, 6:59 pm

பல்லாவரத்தில் மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பல்லாவரத்தை அடுத்த பாரதி நகா், துலுக்கானத்தம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சனா பாத்திமா (26). இவரது கணவா் அனகாபுத்தூா் பகுதியைச் சோ்ந்த முகமது அலி (32). சனா பாத்திமா குடும்பப் பிரச்னை காரணமாக 2 ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து தனது 4 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறாா். முகமது அலி குழந்தையைப் பாா்க்க வருவதாகக் கூறி அவ்வப்போது மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், கடந்த 15-ஆம் தேதி முகமது அலி, சனா பாத்திமாவிடம் தகராறு செய்து, அவரது முகத்தில் ஆசிட் ஊற்றியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சனா பாத்திமா, பூந்தமல்லி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து பல்லாவரம் போலீஸாா் வழக்குப் பதிந்து முகமது அலியை கைது செய்தனா்.