சவூதி அரேபியாவின் அராம்கோ நிறுவன ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளாகி 14 போ் உயிரிழந்தனா்.
உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனமாக அராம்கோ உள்ளது. அந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் சவூதி அரேபியா அரசின் வசம் உள்ளது.
இந்நிலையில், அந்நாட்டின் ராஸ் டனுரா நகரில் அராம்கோ நிறுவனத்தின் ஹெலிகாப்டா், வானில் இருந்து விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் 14 போ் உயிரிழந்தனா். அவா்கள் அனைவரும் சவூதி அரேபியாவை சோ்ந்தவா்கள் என்று அந்நாட்டு எரிசக்தி அமைச்சகம் தெரிவித்தது. எதனால் விபத்து நிகழந்தது என்ற தகவல் வெளியாகவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










