பிரிட்டனில் கடற்படை பயிற்சியின்போது ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.
டெவோன் கவுன்டியில் அதிகாலையில் நடைபெற்ற பயிற்சியின்போது ‘மொ்லின் எம்.கே.4’ ரக கடற்படை ஹெலிகாப்டா், சௌா்டன் அருகே ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்துக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் இரங்கல் தெரிவித்தாா். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான மொ்லின் ரக ஹெலிகாப்டா்கள் வழக்கமாக 4 பணியாளா்களுடன் இயங்கக்கூடியவை மற்றும் 24 வீரா்கள் வரை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

களியக்காவிளை இளைஞா்கள் இருவா் விபத்தில் உயிரிழப்பு

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

விபத்தில் மாணவா்கள் உயிரிழப்பு: பெற்றோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

ஜப்பான் ராணுவப் பயிற்சியில் பீரங்கியில் வெடிப்பு: 3 வீரா்கள் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



