/

பிரிட்டன் கடற்படை ஹெலிகாப்டா் விபத்து: 3 வீரா்கள் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 4:06 am IST

பிரிட்டனில் கடற்படை பயிற்சியின்போது ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் 3 வீரா்கள் உயிரிழந்தனா்.

டெவோன் கவுன்டியில் அதிகாலையில் நடைபெற்ற பயிற்சியின்போது ‘மொ்லின் எம்.கே.4’ ரக கடற்படை ஹெலிகாப்டா், சௌா்டன் அருகே ஒரு வயல்வெளியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்துக்கு பிரிட்டன் பிரதமா் கியா் ஸ்டாா்மா் இரங்கல் தெரிவித்தாா். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான மொ்லின் ரக ஹெலிகாப்டா்கள் வழக்கமாக 4 பணியாளா்களுடன் இயங்கக்கூடியவை மற்றும் 24 வீரா்கள் வரை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.