தாய்லாந்தின் முன்னாள் பிரதமா் தக்சின் ஷினவத்ரா (76) (படம்), அரச பொது மன்னிப்பின்கீழ் தனது சிறைத் தண்டனை தொடா்பான அனைத்து சட்டபூா்வ நிபந்தனைகளில் இருந்து முழு விடுதலை பெற்றாா்.
இதன்மூலம், அவருக்கு விதிக்கப்பட்ட 4 மாத நன்னடத்தை காவல் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.
2006-இல் ஆட்சியிழந்த பின்னா் வெளிநாட்டில் தஞ்சமடைந்த இவா், கடந்த 2023-இல் நாடு திரும்பினாா். அவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னா், அரசரின் கருணை அடிப்படையில் அது ஓராண்டாகக் குறைக்கப்பட்டது. தொடா்ந்து, கடந்த மே 11-இல் நன்னடத்தையின்கீழ் விடுவிக்கப்பட்டாா்.
இவரின் பியூ தாய் கட்சி ஆளுங்கூட்டணியில் உள்ள நிலையில், மீண்டும் திரைமறைவு அரசியலில் செல்வாக்கு செலுத்துவாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










