திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!

ஈரானிய படைகளின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு மத்திய அரசு கண்டனம்...

News image

இந்திய வெளியுறவுத் துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் - Din

Updated On :3 ஜூன் 2026, 8:00 pm IST

குவைத் மீதான ஈரானிய படைகளின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் போர்ப் பதற்றம் நிலவி வரும் நிலையில், அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக குவைத்திலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின.

குவைத்தின் சர்வதேச விமான நிலையம் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும், ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில், குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு, மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 3) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கும், ஏராளமான இந்தியர்கள் படுகாயமடைந்ததற்கும் காரணமான குவைத் விமான நிலையத்தின் மீதான தாக்குதலுக்கு நாங்கள் கண்டனம் தெரிவிக்கிறோம். மேற்காசியாவில் நடைபெறும் மோதலில், மக்கள் மீதும் மக்கள் கட்டமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்படக் கூடாது என வலியுறுத்துகிறோம்” எனக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தொடங்கியது முதல் வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலில் இதுவரை 10 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Central Government has condemned the killing of an Indian national in an attack by Iranian forces on Kuwait.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.