திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குவைத் விமான நிலையம் மீதான ஈரானின் தாக்குதலில் பலியானவர் இந்தியர்!

குவைத் விமான நிலையத்தின் மீதான ஈரானின் தாக்குதலில் பலியானவர் இந்தியர் என அறிவிப்பு...

News image

ஈரான் தாக்குதலில் உருக்குலைந்த குவைத் விமான நிலையம் - x

Updated On :3 ஜூன் 2026, 7:07 pm IST

குவைத் விமான நிலையத்தின் மீதான ஈரானிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டவர் இந்தியர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே போர்நிறுத்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க படைகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) அன்று தாக்குதல் நடத்தின.

இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத்திலுள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்து ஈரானிய படைகள் தாக்குதல் நடத்தின. இதில், குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானிய படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்ட அந்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் இன்று (ஜூன் 3) அறிவித்துள்ளது.

இதுபற்றி, குவைத்திலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

“இன்று குவைத் விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஓர் இந்தியர் துயரமான முறையில் உயிரிழந்ததற்கு இந்தியத் தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது” எனக் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரில், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

one of the individuals killed in the attack by Iranian forces on Kuwait Airport was an Indian national.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.