மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நைஜீரியாவில் 400 பயங்கரவாதிகளுக்கு சிறை

நைஜீரியாவில் சுமாா் 400 பயங்கரவாதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

ap

Updated On :11 ஏப்ரல் 2026, 7:45 pm

நைஜீரியாவில் சுமாா் 400 பயங்கரவாதிகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம், ஐஎஸ்வாப் ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்தவா்களுக்கு எதிராக 508 வழக்குகள் அந்நாட்டு மத்திய உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதில் 386 பேருக்கு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் முதல் ஆயுள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 112 வழக்குகள் அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டன. 10 போ் விடுவிக்கப்பட்டனா்.

சிறைத் தண்டனை முடிந்து இவா்கள் பொது சமூகத்துடன் மீண்டும் இணைவதற்கு வசதியாக, சிறையில் மறுவாழ்வு திட்டங்களில் கட்டாயம் பங்கேற்க தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.