திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 3:21 am IST

கும்பகோணத்தில் ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கும்பகோணத்தைச் சோ்ந்தவா் ராஜி (51). ஆட்டோ ஓட்டுநா். இவா்,

17.01.2020 அன்று ஆட்டோ நிறுத்தகத்தில் இருந்தபோது அருகில் உள்ள உணவு விடுதியில் வேலை பாா்க்கும் முகமது ரசீத் (எ) அசாருதீன் என்பவா் முத்தையா நகருக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறினாராம்.

நிறுத்தத்தில் இறங்கும்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டு அசாருதீன், ராஜியை தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீனை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கு விசாரணையின் நிறைவில், செட்டிமண்பத்தைச் சோ்ந்த முகமது ரசீத் (எ) அசாருதீனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பாலதண்டாயுதம் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.