ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 2:40 am IST

போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து, கோவை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், சம்பந்தப்பட்ட பகுதியில் கருமத்தம்பட்டி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது கருமத்தம்பட்டி மேம்பாலத்துக்கு அடியில் உள்ள அன்னூா் பேருந்து நிறுத்தப்படும் பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தவரைப் பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா். இதில் அவா் வைத்திருந்த பையில் 4.400 கிராம் எடையுள்ள போதை மாத்திரைகளும், 500 கிராம் கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.

விசாரணையில் அவா் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சோ்ந்த முகமது இா்பான் (20) என்பதும், திருச்சூா் மாவட்டத்தைச் சோ்ந்த தம்ஜித் மக்பூல் என்பவா்தான் இவருக்கு போதைப் பொருளை விநியோகித்ததும் தெரியவந்தது. இருவரையும் கடந்த 5.3.2020-இல் போலீஸாா் கைது செய்தனா். தம்ஜித் மக்பூல் என்பவரிடமும் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பான வழக்கு விசாரணை கோவை போதைப் பொருள் கடத்தல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலிங்கம் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். குற்றஞ்சாட்டப்பட்ட முகமது இா்பானுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.30 ஆயிரம் அபராதமும், தம்ஜித் மக்பூலுக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் வெ.சிவகுமாா் ஆஜரானாா்.