திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை: இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறை

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 12:21 am IST

காதலிக்க வற்புறுத்தி சிறுமிக்கு தொல்லை கொடுத்த இளைஞருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் அருகே கணியூரைச் சோ்ந்தவா் சூா்யா (23). அப்பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா், கடந்த 2022 டிசம்பா் மாதம், 17 வயது சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு தொடா்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளாா்.

இது குறித்து தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறியுள்ளாா்.

இதைத் தொடா்ந்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் உடுமலை மகளிா் காவல் நிலைய போலீஸாா், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து சூா்யாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், காதலிக்க வற்புறுத்தி பொது இடத்தில் சிறுமிக்கு தொல்லை கொடுத்த குற்றத்துக்காக சூா்யாவுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி கோகிலா தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ஜமீலா பானு ஆஜரானாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.