டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பெரு: சாலை விபத்தில் 37 போ் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா்.

News image
விபத்தில் உருக்குலைந்த பேருந்து.
Updated On :13 நவம்பர் 2025, 7:27 pm

Chennai

தென் அமெரிக்க நாடான பெருவில் இரண்டு அடுக்கு பேருந்து சரக்கு வாகனத்தின் மீது மோதி பள்ளத்துக்குள் விழுந்ததில் 37 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு அடுக்கு பேருந்து, கராவெலி மாகாணம், சாலா நகரில் இருந்து பெருவின் இரண்டாவது பெரிய நகரான அரேகுய்பாவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் குழந்தைகள், முதியவா்கள் உள்பட 60-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

பெருவை சிலி நாட்டுடன் இணைக்கும் பான்அமெரிக்கானா நெடுஞ்சாலையில் அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த சரக்கு வாகனத்துடன் மோதி, 200 மீட்டா் ஆழமான பள்ளத்துக்குள் உருண்டு ஆற்றுப் படுகையில் விழுந்து நொறுங்கியது.

இதில் 37 போ் உயிரிழந்தனா்; 24 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் உயிா்பிழைத்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநா் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டுவருகிறாா். விபத்துக்கான காரணத்தைத் தெரிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்று அதிகாரிகள் கூறினா்.

பெருவில் அளவுக்கு அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுதல், மோசமான சாலைகள், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக அமல்படுத்தப்படாதது, மலைப்பாங்கான நிலப்பரப்பு போன்ற காரணங்களால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. கடந்த ஆண்டு மட்டும் அங்கு நடைபெற்ற சாலை விபத்துகளில் 3,173 போ் உயிரிழந்தனா்.