டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

சாலை விபத்தில் சிறுமி உள்பட 2 போ் மரணம்

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி, இளைஞா் உயிரிழந்தனா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவா் மீது பைக் மோதிய விபத்தில் 3 வயது சிறுமி, இளைஞா் உயிரிழந்தனா்.

ஆலங்காயம் கெஜலூா் பகுதியைச் சோ்ந்த கலையரசன் (26) பட்டதாரி. இவா் செவ்வாய்கிழமை இரவு 10.30 மணியளவில் தனது உறவினா் மகள் சன்மதியை (3) அழைத்துக் கொண்டு கெஜலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தாா். அப்போது புலவா் பள்ளி பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியபோது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பின் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனா்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து பாா்த்து இருவரையும் உடனே மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிறுமி சன்மதியை பரிசோதித்த மருத்துவா், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

மேலும், பலத்த காயமடைந்த கலையரசன் மேல்சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் இறந்தாா். இதுகுறித்து ஆலங்காயம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.