சாலை விபத்துகளில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழப்பு!
மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.


மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த இரு வெவ்வேறு சாலை விபத்துகளில் இளைஞா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், பெரிய சூரக்குண்டு காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மூா்த்தி மகன் ரமேஷ் (23). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மேலூரிலிருந்து பெரியசூரக்குண்டுக்கு வியாழக்கிழமை மாலை சென்றாா். பஞ்சபாண்டவா் மலை அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ரமேஷை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் யா.கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் கணேசன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பள்ளக்குறிச்சியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் பழனிசாமி (47). இவா், தனது இரு சக்கர வாகனத்தில் மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து பொன்னமராவதிக்கு வியாழக்கிழமை சென்றாா். திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் பள்ளப்பட்டி- வெள்ளமலைப்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் மோதியது.
இதில், பலத்த காயமடைந்த பழனிச்சாமியை மீட்ட அக்கம்பக்கத்தின் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் நாகா்கோவிலைச் சோ்ந்த சிங்கராயன் மகன் ரெமிங்டன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...