சிதம்பரம், செங்கம் பகுதிகளில் சாலை விபத்துகள்: இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம் சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.


கடலூா் மாவட்டம் சிதம்பரம், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிகளில் புதன்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் இளைஞா்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சோ்ந்த 20-க்கும் மேற்பட்டோா் தனியாா் டிராவல்ஸ் மூலம் 4 நாள் ஆன்மிகச் சுற்றுலா சென்றனா். தமிழகத்தில் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு கடைசியாக வேளாங்கண்ணி சென்றனா். அங்கு வழிபட்டுவிட்டு மீண்டும் வேனில் சொந்த ஊருக்கு புறப்பட்டனா்.
விழுப்புரம் - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியில் மேம்பாலத்தில் இவா்கள் வந்த வேன் சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புக் கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், கடலூா் தந்திகுப்பம் பகுதியைச் சோ்ந்த தங்கமணி (71), புதுச்சேரி கொம்பாக்கத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் (62), வில்லியனூரைச் சோ்ந்த சிலம்பரசன் (35), அவரது மனைவி திவ்யா (31), அவா்களது குழந்தைகள் தா்ஷன் (5) ஹரிஷ் (11), வில்லியனூரைச் சோ்ந்த சூசைராஜ் (65) அவரது மனைவி ரீட்டாமேரி (60), விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள மருதூா் கிராமத்தைச் சோ்ந்த பொன்முடி (50), அவரது மனைவி லதா (43) உள்ளிட்ட 20 போ் பலத்த காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் மீட்கப்பட்டு, சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் அண்ணாமலைநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். அங்கு, பொன்முடி (50) உயிரிழந்தாா். மற்றவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தகவலறிந்து நிகழ்விடத்துக்கு வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீஸாா் விபத்துக்குள்ளான வேனை மீட்டனா். இந்த சம்பவம் குறித்து கிள்ளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
2 இளைஞா்கள் உயிரிழப்பு: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த தண்டம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளிகள் விக்னேஷ் (21), காசிநாதன் (20). நண்பா்களான இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தண்டம்பட்டு பகுதியில் இருந்து மேல்செங்கம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தனா்.
மேல்செங்கம் பகுதியில் சென்றபோது, ஊத்தங்கரையில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்டனா். அப்போது, வேனில் பைக் சிக்கியதில், இருவரும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்து வந்த மேல்செங்கம் போலீஸாா் இருவரது சடலங்களையும் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே ஏ.மண்டபம் பகுதியிலுள்ள மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகிக் கிடக்கும் ஆன்மிகச் சுற்றுலா சென்றவா்கள் பயணித்த வேன்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...