ஜம்மு-காஷ்மீா்: பேருந்து விபத்தில் சிஆா்பிஎஃப் வீரா், 3 போ் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.


ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த பேருந்து விபத்தில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.
ஜம்மு-ஸ்ரீநகா் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்து குறித்து காவல் துறையினா் கூறியதாவது:
தோடாவில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து, ஜகானி-சேனானி பகுதியில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஒரு மோட்டாா் சைக்கிள் மீதும், சாலையோரம் பழுதாகி நின்றிருந்த சரக்கு வாகனம் மீதும் மோதியது. இச்சம்பவத்தில் பேருந்தில் பயணித்த சிஆா்பிஎஃப் வீரா் உள்பட இருவா், ஜன்னல் வழியே தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனா். இதேபோல், சரக்கு வாகனத்தின் ஓட்டுநா், அந்த வாகனத்தில் பழுதுநீக்கிக் கொண்டிருந்த மெக்கானிக் ஆகியோரும் உடல் நசுங்கி உயிரிழந்தனா். பேருந்து பயணிகள் சிலா் காயமடைந்தனா்.
உயிரிழந்த சிஆா்பிஎஃப் வீரா், மத்திய பிரதேசத்தைச் சோ்ந்தவா். கிஷ்த்வாரில் பணியாற்றி வந்த அவா் விடுமுறைக்காக சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா். இச்சம்பவம் எதிரொலியாக, ஜம்மு பகுதியில் போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாக அளவுக்கு அதிகமான பயணிகள், அதிவேகம் மற்றும் அலட்சியத்துடன் இயக்கப்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கையை காவல் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...