மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்படாது, கரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதவர்கள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் கரோனா கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்குகிறது.
இதையும் படிக்க.. இன்னுமா திடுக்கிடும் தகவல்கள்? ஷ்ரத்தா கொலையில் தீராத அதிர்ச்சி
கடந்த ஆறு மாதங்களில் கரோனாவும் பாதிக்காமல், தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளாமல் இருந்தால், கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.
இதையொட்டி, அந்நாட்டைச் சேர்ந்த 18 - 29 வயதுடைய மக்கள் தங்களது 4வது தவணை தடுப்பூசியையும், 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5வது தவணையையும் செலுத்திக் கொள்ள வேண்டும்.
5 வயது முதல் 17 வயதுடைய சிறார்களில் ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருந்தால் அவர்கள் மட்டும் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்றும், மற்ற குழந்தைகள் யாருக்கும் கூடுதல் தவணை தடுப்பூசி கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் 16 வயதுடையவர்களில் 72 சதவிகிதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது, அவர்களுக்கு இதுவரை மூன்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும்.
இதையும் படிக்க.. பெற்றோரே.. கூடுகள் காலியாகும் நோயை எதிர்கொள்வோம்!
இன்னும் ஏன் தடுப்பூசி என்று கேட்பவர்களுக்கு.. உலகம் முழுவதும் கரோனா தொற்று இன்னமும் பரவிக்கொண்டுதானிருக்கிறது. ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் மட்டும் 18,590 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் நாள் சராசரி 2,656 என்பதாகும்.
ஒருவேளை அறிகுறி தென்படும் அனைவருமே பரிசோதனை செய்து கொண்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வாரம் அதற்கு முந்தைய வாரத்தைக் காட்டிலும் பாதிப்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதிமன்ற விசாரணை காணொலிகளை வெளியிட்ட விவகாரம்: கேஜரிவால் பதிலளிக்க உத்தரவு

புதுமண, நிச்சயதாா்த்த ஜோடிகள் வாக்களிப்பு

பாளை. தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு: தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


