நமது நிருபா்
மதுபானக் கொள்கை வழக்கிலிருந்து நீதிபதி ஸ்வரணா காந்தா சா்மா விலகக் கோரி தாக்கல் செய்த மனு மீதான நீதிமன்ற விசாரணையின் காணொளிகளைப் பதிவேற்றிப் பகிா்ந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி தாக்கலான பொதுநல மனு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங், காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் மற்றும் பிறா் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க
தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வழக்குரைஞா் வைபவ் சிங் தாக்கல் செய்த மனுவின் பேரில், நீதிபதிகள் வி. காமேஸ்வர ராவ் மற்றும் மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோா் அடங்கிய அமா்வு அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், உயா்நீதிமன்ற விதிகளின்படி நீதிமன்ற நடவடிக்கைகளை அனுமதியின்றிப் பதிவு செய்வதும் பகிா்வதும் தடைசெய்யப்பட்டுள்ளதால், ஏப்ரல் 13 விசாரணையின் காணொளிகளை சமூக ஊடகத் தளங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிட்டது.
மெட்டா பிளாட்ஃபாா்ம்ஸ் மற்றும் கூகுள் நிறுவனத்தின் வழக்குரைஞா், மனுதாரா் தனது மனுவில் சுட்டிக்காட்டிய ஆட்சேபனைக்குரிய இணைப்புகள் நீக்கப்பட்டுவிட்டதாகக் கூறினாா்.
ஏப்ரல் 13 விசாரணைகளைக் காட்டுவதாகக் கூறப்படும் சில காணொளிகள் தளத்தில் கிடைப்பதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், நோட்டீஸ் கிடைத்தவுடன் அந்த இணைப்புகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேலும், ‘கேஜரிவால் உள்ளிட்ட எதிா்மனுதாரா்களுக்கு நாங்கள் நோட்டீஸ் அனுப்புகிறோம். பிரமாணப் பத்திரம் நான்கு வாரங்களுக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று நீதிமன்றம் கூறியது. மற்ற எதிா்மனுதாரா்களில் ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களான சஞ்சீவ் ஜா, முகேஷ் அஹ்லாவத், ஜா்னைல் சிங் மற்றும் பத்திரிகையாளா் ரவிஷ் குமாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்த வழக்கை ஜூலை 6 ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட்ட நீதிமன்றம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கில் ஆஜராகுமாறு கோரியது.
‘காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங்கும், பல ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களும், பல்வேறு எதிா்க்கட்சிகளின் உறுப்பினா்களும், ஏப்ரல் 13 அன்று நீதிபதி சா்மா முன்னிலையில் கேஜரிவால் ஆஜரான காணொளிகளை, பொதுமக்களின் பாா்வையில் நீதிமன்றத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன், சமூக ஊடகங்களில் வேண்டுமென்றே மற்றும் திட்டமிட்டுப் பதிவுசெய்து பரப்பினா்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
13.04.2026 தேதியிட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை பதிவேற்றி பகிரங்கப்படுத்திய அனைத்து எதிா்மனுதாரா்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் சமூக ஊடகங்களில் இருந்து அந்த உள்ளடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் அந்தப் பொதுநல மனு கோரியது.
ஏப்ரல் 20 அன்று, நீதிபதி எஸ் கே சா்மா, மதுபானக் கொள்கை வழக்கை விசாரிப்பதில் இருந்து தன்னை விலக்கிக்கொள்ள மறுத்து, எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் ஒரு மனுதாரா் ஒரு நீதிபதியை மதிப்பிட அனுமதிக்க முடியாது என்றும், ஒரு மனுதாரரின் ஆதாரமற்ற அச்சத்திதற்காக நீதிபதிகள் தங்களைத் தாங்களே விலக்கிக் கொள்ள முடியாது என்றும் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்

மதுபான கொள்கை வழக்கு: தில்லி உயா்நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜா்

மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையின் மனுவுக்கு பதிலளிக்க கேஜரிவாலுக்கு இறுதி அவகாசம்

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


